நாட்டுக்குள் கோகெயின் போதைப்பொருள் கடத்த முயற்சித்த கென்ய பெண் கைது
கென்யா பாஸ்போர்ட்டை வைத்திருந்த ஒரு பெண், காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நாட்டிற்குள் கோகோயின் கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தாரில் இருந்து விமானத்தில் வந்திருந்தஅவர் விமான நிலைய வருகை இடத்தில வைத்து கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
விமானநிலைய சுங்கப்பிரிவினரால் அவரது பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 குளிசைகள் வடிவிலான கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகநபர் விமான நிலையத்தில் உள்ள போலீஸ் போதைப்பொருள் பணியகதிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் பயணி கோகோயின் குளிசைகள் பலவற்றை விழுங்கிவிட்டார் என்பதும் அப்போது கண்டுபிடிக்கப்பட்டது.