Fri. May 17th, 2024

கட்டுப்பணத்தை இழந்தனர் 33 வேட்பாளர்கள்

தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இரு வேட்பாளர்கள் தவிர்ந்த 33 வேட்பாளர்களும் தமது கட்டுப் பணத்தை இழந்தனர்.

தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்றுமில்லாதவாறு இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் இரு வேட்பாளர்களைத் தவிர ஏனையோர் தமது கட்டுப் பணத்தை கூட மீளப் பெறமுடியாமல் தோல்வியடைந்துள்ளனர். தேர்தல் யாப்பின் படி பதிவு செய்யப்பட்ட வாக்கில் குறைந்தது 5%ற்கு மேல் பெற்றாலே கட்டுப்பணம் மீளப் பெற முடியும். ஆனால் தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கோட்டாயபாய ராஜபக்ஷ 52.25% வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 41.99% வீதமான வாக்குகளைப் பெற்றதுடன் ஏனைய 33  வாக்காளர்களும் 5% மான வாக்குகளுக்கு குறைவாக பெற்றமையால் தமது கட்டுப் பணத்தை கூட மீளப் பெறமுடியாமல் தோல்வியடைந்ததுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்