Thu. May 16th, 2024

தோல்விக்கு பின் தேர்தல் அலுவலகத்தில் சஜித், கண்ணீருடன் ஆதரவாளர்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கொழும்பு வோக்ஸ்ஹால் தெருவில் உள்ள தனது ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பின்னர் இன்றுதான் முதல் முறையாக அவர் அங்குவந்துள்ளார்

ஏராளமான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் அங்கு கூடியுள்ளார்கள்

அவரது ஆதரவாளர்கள் வரிசையில் வந்து கைகளை பிடித்து தோல்வியின் வருத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். பலர் கண்ணீருடன் அவரை சந்திப்பதாகவும் தெரியவருகிறது

சஜித் பிரேமதாசாவுடன் அவருக்கு ஆதரவான பல ஐக்கியதேசிய கட்சி எம்.பி களும் உடனிருக்கிறார்கள்.

இந்த சந்திப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் ஒழுங்கு செய்யப்படவிருந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்