Thu. May 16th, 2024

கார்டினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி கோத்தபாய

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கார்டினல் மல்கம் ரஞ்சித்தை இன்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து கூறிய அவர், கார்டினல் மல்கம் உடனான சந்திப்பு கத்தோலிக்க திருச்சபையின் எதிர்பார்ப்புகள் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
தான் ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பக்க சார்பற்ற விசாரணை இடம்பெறும் என்று தேர்தல் பிரச்சார காலத்தில் கோத்தபாய ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்