தேசிய கபடி அணியில் யாழ் மாவட்ட வீராங்கனைகள் தெரிவு
ஆசிய கிண்ணத்திற்கான பெண்களிற்கான கபடிப் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இலங்கை தேசிய அணியில் யாழ் மாவட்ட 4 வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை தேசிய கபடிப் பெண்கள் அணிக்கான தெரிவில் யாழ் மாவட்ட வீராங்கனைகள் 4 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30.10.2021ம் திகதி கொழும்பு ரொறின்டன் விளையாட்டு அமைச்சின் உள்ளக விளையாட்டு அரங்கில் இலங்கை தேசிய கபடி பெண்கள் அணிக்கான தெரிவு நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வி.டிலக்சனா, இ.பிரியவர்னா, து.சுயர்னியா,எஸ்.மேரி நிலக்ஷனா ஆகியோர் 18பேர் கொண்ட தேசிய அணி குழாமில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.