தெணியான் அவர்களின் உருவச்சிலை திறப்பும், நூல் வெளியீடும்
“சாகித்ய ரத்னா” தெணியான் அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்தன நிகழ்வும், தெணியான் அவர்களின் உருவச்சிலை திறப்பும், “ஒதுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான் ” நூல் வெளியீடும் எதிர்வரும் 10ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கொற்றாவத்தை கலையருவியில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் கவிஞர். இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்உருவச்சிலை திறப்புரையை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான், சட்டத்தரணி சோ.தேவராஜா, நூல் வெளியீட்டுரையும் கருத்துரையும் எழுத்தாளர் மு.அநாதரட்சகன், தெணியான் பற்றிய நினைவுப் பகிர்வுகளை கலாநிதி. ந.ரவீந்திரன், சட்டத்தரணி தேசிய.ரெங்கன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.