துன்னாலையில் கசிப்புடன் பெண் கைது
வடமராட்சி பகுதியில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் துன்னாலை மேற்கு சக்குச்சம்பாதி எனும் இடத்தில் நடைபெற்றது.
குறித்த 37 வயது மதிக்கத்தக்க பெண்ணிடமிருந்து 21 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கோடாவும், 2 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது.