தீபாவளி தினத்தில் ஒருவர் அடித்துக் கொலை!! -கொலைகாரர்களை தேடி வலை விரிப்பு-
பளைப் பகுதியில் தீபாவளி தினத்தன்று ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இயக்கச்சியை சேர்ந்த தர்மலிங்கம் தங்கராசா (57 வயது) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவர்.
காலையில் ஏற்பட்ட மோதல் மாலையில் கொலையில் முடிந்துள்து அடித்துக் கொலை செய்ததாக தெரிவிக்ப்படும் நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.