Tue. May 14th, 2024

கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு!! -மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது-

மாதகல் – பொன்னாலை வீதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து கடற்படை முகாம் அமைக்க எடுத்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிந்த உள்ளூர் மக்கள் இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் திரண்டனர்.

வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அங்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வருகை தந்தனர்.

அவர்கள் அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அதனால் மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்