வட,கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு யாருக்கு? -முடிவு தொடர்பில் கசிந்துள்ள தகவல்-
ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பதை நாளை மறுதினம் அறிவிக்கவுள்ளதாக வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் முடிவு எடுத்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை நண்பகல் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அதேபோல, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்,எப் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, டெலோ அமைப்பு, ப்லொட் அமைப்பு ஆகியனவும் குறித்த தீர்மானத்திற்கு இணங்கியுள்ளன.
கடந்த காலங்களில் பல்வேறு வகையிலான பேச்சுவார்த்தைகளில் குறித்த கட்சிகள் ஈடுபட்டிருந்ததோடு, ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 14 அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.