தாய் மண்ணிற்காய் தாய்போன்ற சேவை செய்த தமிழிச்சி….
யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள தீவில் உள்ள கரம்பொன் ஊரில் புலம்பெயர் தேசத்தில் இருந்து 2005 மீளவும் தாயகத்திற்கு வருகைதந்த செல்வி சோதிநாயகி குருசாமி அவர்களினால் தனது சொந்த ஊரின் மக்களின் நிலைமைகளை கண்டு மனம் வருந்தி 37 பரப்பு காணியினை கொள்வனவு செய்து அதனை ஊரில் சொந்தமான நிலம் இல்லாத 14 குடும்பங்களிற்கு இரண்டு பரப்பு வீதம் வழங்கி அதற்கான பாதையும் தனது சொந்த நிதியில் வழங்கியதோடு இன்று அந்த 14 குடும்பங்களிற்குமான வீட அமைக்கும் பணிகளில் 80 வீத செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய வேலைகள் நடை பெற்று வருகின்றன.
இதற்கமைவாக முதற்கட்டமாக 3 வீடுகள் முழுமையாக நிறைவடைந்து குடும்பங்கள் குடியேறி உள்ள நிலையிலே; மீதமுள்ள வீடுகளின் வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நல்ல மனிதர்களை வாழ்த்த வேண்டியது எமது கடமையாகும்.
அதே நேரத்தில் புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எமது உறவுகள் இவ்வாறான வேலை திட்டத்தில் இணைந்து தமது ஊர்களில் செயற்பட்டால் எமது பிரதேசம் வளம் பெறும்
என்பது மறுதலிக்க முடியாத உண்மை.