Thu. May 16th, 2024

தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழில் சம்பவம்

தாக்குதலுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பத் தலைவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.  யாழ்ப்பாண ஆசிர்வாதம் வீதியைச் சேர்ந்த சதாசிவம் நந்தகுமார் வயது 48 குடும்பத்தலைவரே உயிரிழந்தார் அவர் கடந்த முதலாம் திகதி வெளியில் சென்று வந்ததாகவும் பின்னர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் வைத்திய சாலைக்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதவான் ஏ பீற்றர் போல் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்