தவிசாளர் வீட்டிற்கு முன்னால் பெண் தீ மூட்டி உயிரிழப்பு
வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் தீ மூட்டிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(17.04.2023) அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குறித்த பெண் கணவனை பிரிந்து 10 வயதுப் பிள்ளையுடன் வாழ்ந்து வருவதுடன், முன்னாள் தவிசாளரின் மனைவியும் இவரை பிரிந்து வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.