தமிழில் பேசகூடாது! ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள கொழும்பு உணவகம்..
கொழும்பில் உணவகம் ஒன்றில் ஆங்கிலம், சிங்களம் மட்டும் பேசவேண்டும். எனவும் தமிழில் பேசகூடாது எனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விடயம் கடும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்”
எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது.
குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது.