Wed. May 15th, 2024

கோத்தா – சரத் பொன்சேகாவை சர்வதேச நிதிமன்றில் நிறுத்த வேண்டும்!! -ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்-

தமிழர்களை இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நிதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்த தனக்கு வாள்களிக்குமாறு ஜனாதிபதி தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இன்று செவ்வாக்கிழமை நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத் திற்கும் எமது நிலைப்பாட்டைச் சொல்லுவோம். எங்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களுடைய வாக்குகளைத் தரமாட்டோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும்.

இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். தற்போது ஏட்டிக்குப் போட்டியாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்று யாழ்ப்பாணத்தில் கேத்தாபய மற்றும் மகிந் தராஜபக்ச தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக படுகொலை செய்தவர்கள் கடைசியாக ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் கூட தமிழ்மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் இன்று வந்து தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள் இதுவரைக்கும் பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவர்களாக இருந்து விட்டு இன்று வந்து இவ்வாறு பேசுவது யாரை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்