யாழில் மாசுபட்ட கடலோரம்!! -விழிப்புணர்வை ஏற்படுத்தும் புகைப்பட கண்காட்சி-
யாழ்ப்பாணத்தில் மிக மாசுபட்ட கடலோர பகுதிகளில் ஒன்றான குருநகர் கடலோர பகுதியின் நினையை காண்பிக்கும் விழிப்புணர்வு ஒளிப்பட கண்காட்சி இன்று செவ்வாக்கிழமை யாழ்.குருநகர் மீன் சந்தையில் நடைபெற்றிருந்தது.
காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடாத்தப்பட்ட இந்த கண்காட்சியில் குருநகர் கடலோர பகுதி காட்சிகள், மீனவ மக்கள் தொடர்பான காட்சிகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இளம் புகைப்பட கலைஞர் தர்மபாலன் திலக்ஸனால் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.