தனிமை படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 13 வரை நீடிப்பு
தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் கோரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் செயல்திட்ட குழு என்பவற்றுடன் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து இருப்பதுடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்துமாறும் அமைச்சர் ட்விட்டர் பதிவினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்