செல்வாபுரம் மாணவர்கள் கெளரவிப்பு
கரணவாய் செல்வாபுரம் இளங்கோ சனசமூக நிலையத்தினால் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த சன சமூக நிலைய அங்கத்துவ மாணவர்களை கௌரவிக்கும் நாளை புதன்கிழமை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சனசமூக நிலையத்தின் தலைவர்
கு.மகாலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.