சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்தது பொலீசார் தான்
சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து பொலீசார் தான் காப்பாற்றியதாக வடக்கு மாகாண ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.