Sun. May 19th, 2024

சிங்களவா்களக்கு நோகாத தீா்வு இந்திய முறையிலான தீா்வே! சொன்னது சங்காி.

இனப்பிரச்சினை தீா்வு விடயத்தில் பெரும்பான்மை இன மக்களுக்கு வலிகாத வகையில் இந்திய முறையிலான தீா்வே பொருத்தமானதாக அமையும் என தமிழா் விடுதலை கூட்டணி தலைவா் வி.ஆனந்தசங்காி கூறியுள்ளாா்.

மட்டக்களப்பு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமை காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக கூட்டணியில்  சேரவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய இந்த அமைப்பு இயன்றளவு செயற்படும்.

அதேவேளை மிகப் பெரும் தலைவரால்  உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை கடந்த காலத்தில் சிலர் தங்கள் தேவைக்காக உபயோகித்து பொய் பிரச்சாரங்கள் செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தஞ்சம் புகுந்து தங்களுக்கு சந்தோசமானவைகளைச் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் என்ன இலச்சியத்துக்காக கட்சியை உருவாக்கினோமோ அந்த இலச்சியத்தை அடையும்வரை நான் எந்தவிதமான தனிப்பட்ட ஆசைகளுக்கு இடம்கொடுக்க மாட்டேன்.

இன்று ஆரம்பித்த கூட்டு ஒரு முறையான கூட்டாக தெரிகின்றது. கடந்த பல வருடங்களாக தம்மை வளர்த்த ஒரு கூட்டும் இருக்கின்றது. இன்று எமது முதலாவது எதிரி அந்த கூட்டுத்தான்.

என்னை பொறுத்த வரையில்எங்களுடைய மக்கள் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,கொழும்பில் வாழ்ந்தால் என்ன நாடளாவிய ரீதியில் சகல தமிழ் மக்களுக்கும்  ஓரே பிரச்சினைதான்.

பெரும்பான்மை மக்கள் ஆதரிக்க கூடிய வகையில் ஒரு தீர்வை 15 ஆண்டுகளுக்கு முன்னர்  லண்டனில் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்தேன் அது இந்திய முறையிலான தீர்வு. ஏன் என்றால்

60 மில்லியன் மக்கள் அவர்கள்தான் எமது பிரச்சனையை பற்றி பேசியவர்கள் அக்கறை கொண்டவர்கள்.  எனது ஒரே ஒரு வேண்டுகோள் இந்திய முறையை பரிசீலத்துப் பாருங்கள் எனவே

ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்தது போல ஒரே அமைப்பாக இந்த தீர்வை முன்வைப்போமாக இருந்தால் எந்த அரசும் தட்டிக்கழிக முடியாது.  50 ஆண்டுகள் பட்ட துன்பங்கள் கஷட்டங்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்