சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவரை காணவில்லை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
புலோலி குரும்பைகட்டியைச் சேர்ந்த பொன்னையா சொர்ணலிங்கம் என்பவரை நேற்றிரவிலிருந்து காணவில்லை. கடந்த 28ம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு மலசலகூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் விடுதிக்கு வரவில்லை என தெரிய வந்துள்ளது.
அவரைக் கண்டவர்கள் கீழ்க்கண்ட எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்
0764828098/ 0768657486