Sun. May 19th, 2024

சாவகச்சேரியில் வீதியில் வாள்களுடன் நின்று அட்ட காசம் புரிந்த இருவர் மடக்கிப் பிடிப்பு

சாவகச்சேரி – மட்டுவில் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை காலை வீதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் புரிந்த இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதனையடுத்து பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புத்தூர் – ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த இரு இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு ஆபத்தான வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான முயற்சிகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்