பெண்ணுடன் தவறான உறவில் இருந்த இளைஞர் தாக்குதல்
திருகோணமலையில் 38 வயதுடைய பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டு தாக்கிய இளைஞர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் நீதிபதி சமிலாகுமாரி ரத்நாயக்க 14ஆம் தேதி உத்தரவிட்டார் வரோதயநகர்.புதுக்குடியிருப்பு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சந்தேகநபரான 19 வயதுடைய இளைஞன் வசிக்கும் பகுதியிலேயே 38 வயதுடைய பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்த நிலையில் அத்துடன் சந்தேக நபர் நீண்ட காலமாக பழகி வந்த நிலையில் தவறான பாலியல் நடவடிக்கைகள் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இது தொடர்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை போலீசார் விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபரை பொலிசார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்