Wed. May 15th, 2024

சாதனை பெண்மணி அகிலத்திருநாயகிக்கு கெளரவம்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 72 வயது சாதனைப் பெண்  திருமதி. அகிலத்திருநாயகி  அவர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் 24/11/2023 நேற்று பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில்  முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி  அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும்,
5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும்
800 மீட்டர் ஓட்டபோட்டி  ஒரு வெண்கலப் பதக்கத்தையும்  வென்று
இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமைக்கு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின்  பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் குறித்த  கெளரவமளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருமதி. அகிலத்திருநாயகி அவர்களது  சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைக்களும், சாதனைப் பெண்மணியின் அனுபவ பகிர்வும்  இடம் பெற்றதுடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு மாவட்ட விளையாட்டுச் சீருடைகள் வழங்கியும் பொன்னாடை மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில்
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்)
எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், லிங்கேஸ்வரன் , பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், சமுர்த்தி பணிப்பாளர் எம்.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி , பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சண்முகலிங்கம் விளையாட்டு ஆர்வலர்கள் விளையாட்டு வீரர்கள் பயிற்றுனர்கள், திருமதி. அகிலத்திருநாயகி  அவர்களது ஆசிரியர் திருமதி.ஐயம்பிள்ளை என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்