சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாணுஜன் ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சர்வதேச குத்துச்சண்டையில் இலங்கையைச் சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் சாணுஜன் வெள்ளி பதக்கத்தை வென்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கும் வடமாகாணத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் வெள்ளி பதக்கம் பெற்றமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாடசாலைகளுக்கு இடையிலான சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 22ம் திகதி முதல் நேற்று வரை சுவீடன் நாட்டில் நடைபெற்றது.
இதில் இலங்கையைச் சேர்ந்த 7 மாணவர்கள் பங்கு பற்றினர். இதில் தமிழ் மாணவனான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் சாணுஜன் கலந்து கொண்டார்.
இவர் 17- 18 வயதிற்குட்பட்ட 81 கிலோ எடைப் பிரிவில் பங்கு பற்றி இறுதிப் போட்டியில் சுவீடன் நாட்டு வீரருடன் மோதி வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்து இலங்கை நாட்டிற்கு பெருமை சேர்த்ததோடு கல்லூரியின் வரலாற்றில் குத்துச்சண்டை போட்டியில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றமையும் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.