அமைச்சர் ஒருவர் ஒரு ஆலோசகரையே வைத்திருக்க அனுமதி – கோத்தபாய அதிரடி
தற்போதுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சர் ஒருவருக்கு ஒரு ஆலோசகர் மட்டுமே வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது ஊழியர்களைக் குறைத்தல் மற்றும் செலவுகளைக் குறைத்தல் என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு ஏற்ப அமைந்ததாகக் கூறப்படுகிறது.
முந்தைய அரசாங்கங்களின் அமைச்சரவையில் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு அமைச்சுக்கு பல ஆலோசகர்களை வைத்திருக்க அனுமதிவழங்ககப்படிருந்தது. இந்த நிலையில் பல அமைச்சர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் ஆலோசகர்களாக நியமித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது