சட்டரீதியான நடவடிக்கைக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் ரிஷாத் பதியுதீன்?
அனைத்து இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரான ரிஷாத் பதியுதீன் விரைவில் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் சட்டரீதியான நடவடிக்கைகள் அவர் மீது எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது .
முன்னாள் அமைச்சரின் ஊழியர் ஒருவர் ஏற்கனவே வெளிநாடு செல்லும் பயண ஒழுங்குகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டாதாகவும் , எவ்வளவு காலம் வெளிநாடு செல்வார்கள் என்பதையோ அல்லது அடுத்த தேர்தலில் போட்டி இடுவாரா என்பது குறித்து தகவல்கள் வெளிவரவில்லை