சஜித் வெல்லாவிட்டால் மீண்டும் இருண்ட யுகம்!! -நாட்டு மக்களை எச்சரிக்கிறார் ரணில்-
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்து, அவரை வெற்றிபெய செய்யாவிட்டார் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
இன்று கொழும்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்:-
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும்.
நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய அனைத்து மதங்களையும் பாதுகாத்து, முன்நோக்கிப் பயணிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை வழங்கத்தக்க வேட்பாளர் சஜித் பிரேமதாசவே ஆவார் என்றார்.