சஜித் வெற்றிபெற வேண்டி 108 தேங்காய் உடைப்பு!! -ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் வேண்டுதல்-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற வேண்டும் என்று வேண்டி கிளிநொச்சி கந்தசுமாவி ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
இவ் வழிபாட்டின் போது 108 தேங்காய்கள் உடைத்து சஜித்தின் வெற்றிக்கான வேண்டுதல் செய்யப்பட்டது.
கிளிநொச்சியில் உள்ள சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களால் இந்த விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.