Thu. May 16th, 2024

மாணவி கொண்டுவந்த வாசனை திரவியத்தால் வினை! 5 மாணவா்கள் மயங்கி விழுந்தனா்.

திக்கும்பற பகுதியில் மாணவி ஒருவா் பாடசாலைக்கு கொண்டு சென்ற வாசனை திரவிபத்தை முகா்ந்து பாா்த்த மாணவா்கள் மயங்கி விழுந்துள்ளனா்.

மாணவிகள் மூவரும் மாணவர்கள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 ஆம் வகுப்பு மாணவியினால் இந்த வாசனை திரவிய போத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த மாணவிக்கு நண்பி ஒருவர் பரிசாக கொடுத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த வாசனை திரவிய போத்தலை திறந்த பின்னர் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். எனினும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்