Fri. May 17th, 2024

சஜித் பிரேமதாச இலங்கை பெண்களால் பாராட்டப்படுவார் -ஹிருணிகா

இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினை குறித்து தைரியமாக பேசியதற்காக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அனைத்து இலங்கை பெண்களாலும் பாராட்டப்படுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ஹிருணிகா பிரேமச்சந்திரா நேற்று தெரிவித்தார்.

மேலும் கூறிய ஹிருணிகா , சஜித் பிரேமதாச ஒரு உண்மையான பெண்களின் பிரச்சினையைப் பற்றி பேசி , சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதாக அளித்த உறுதிமொழியை, சில பெண்கள் கூட கேலி செய்தார்கள் என்றும் கூறினார்.

“திரு பிரேமதாசா பெண்களை பற்றி கவலைப்படுகிறார் என்று ஏளனம் செய்பவர்கள், தங்கள் மனைவிகளைத் தாக்கும் கணவன் மார்களை வீரர்கள் என்று கொண்டாடுகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் பெண்களே இந்த பிரச்சினையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது முரண்பாடாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்

மேலும், கொண்டாட்டங்களின்பொழுது வயதை அடைந்த ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்துவதை ஒரு செயலா என்று கேள்வி எழுப்பிய அவர் , சானிட்டரி நாப்கின்களைப் பற்றி பேசுவது இதை விட மோசமானதா என்றும் கேள்வி எழுப்பினார் ? ‘கொண்டாட்டங்களின் போது வயதை அடைந்த சிறுமிகளை மது போதையில் செல்லும் ஆண்கள் துன்புறுத்துவதை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம். அவர்கள் சென்று சிறுமியைத் தொட்டு, புகைப்படம் எடுத்து சிறுமிகளை துன்புறுத்துகிறார்கள். இதுபோன்ற செயல்களை ஒருவர் ஏற்றுக் கொள்ழும் நபர்களுக்கு , சானிட்டரி நாப்கின்களைக் கொடுப்பது பற்றி பேசுவது ஒரு குற்றமாக கருதப்படுகிறது என்றும் வியப்பு வெளியிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்