சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் மறியலில்
முல்லைத்தீவு குமுளமுனை அலம்பில் பகுதிகளில் பெண்களிடம் சங்கிலி பறப்பில் ஈடுபட்டு கைதான இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச புலனாய்வாளர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இருவரும் முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.