16 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 15 வருட சிறை
16 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றிவரும் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பினை வழங்கிய நீதவான் குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனையும் சிறுமிக்கு 5 லட்சம் ரூபா நஷ்டஈட்டையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் சிறுமிக்காக நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க தவறினால் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கில் 220 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.