கிளிநொச்சி பெரியகுளத்தில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி தடம் புரண்டு இருக்கிறது. இதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தட்சயன் வயது 28 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்த தனது மகனின் மரணச் செய்தி கேட்டு தந்தை தனது கழுத்தை அறுத்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை தருமபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.