Fri. May 17th, 2024

கோட்டா தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவார்!! -கூறுகிறார் ராஜித-

பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

யூ.என்.பியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு தெரிவித்து, கொலன்னாவ பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜிதா சேனாரத்ன, இலங்கைக்கான உரிய கடவுச்சீட்டு கோட்டாபயவிடம் இல்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாகவும், 2 தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் கூறினார்.

எனவே இவற்றை மறைக்கும் முகமாக செயற்பட்டுள்ளார்கள் அதனால் திங்கட்கிழமை எமது வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்வார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்