Sun. May 19th, 2024

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவருக்கும் கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த தாதியுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மற்றும் சேவையாளர்கள்,மற்றும் அந்த வாட்டில் இருந்த சகலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கட்டணம் செலுத்தும் வார்ட்டில் கடமையாற்றிய தாதிக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் , இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 45ஆம் இலக்க வார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்