Mon. May 20th, 2024

இன்று இறந்த பெண் கடந்த 5 வாரங்களாக பல்வேறு இடங்களுக்கும் மருந்தெடுக்க சுற்றி திரிந்தவர்

கொரோனா வைரஸினால் இன்று பகல் உயிரிழந்த கொழும்பைச் சேர்ந்த பெண், கடந்த 5 வாரங்களாக கொழும்பிலுள்ள பல்வேறு மருந்தகங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்குச் சென்றிருந்தமை தற்சமயம் தெரியவந்துள்ளது.

இந்த தகவலைத் கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு நோய் அறிகுறிகள் தென் பட்டு ஐந்து வாரங்களாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளை பெற்று உட்கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவரின் நோய் அறிகுறிகள் தீவிரமடைந்ததையடுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண் தமது சொந்த வாகனத்தில் சென்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், நோய்த் தொற்று தீவிரமடைந்ததையடுத்து இன்று காலை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமததிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்