Fri. May 17th, 2024

கொடிகாமம் இரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்

கொரோனா தொற்று அதிகரிப்பையடுத்து கொடிகாமம் பகுதியில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

தற்போது கொடிகாமம் பகுதியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் J/326 கொடிகாமம் மத்தி மற்றும் J/327 கொடிகாமம் வடக்கு கிராம அலுவலகர் பிரிவுகள் அனைத்தும் இன்று முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இதனால் இப்பிரிவுகளில் இருந்து வெளிச்செல்லவோ அல்லது உட்செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்