Thu. May 16th, 2024

கேப்பாபுலவு விமானப்படை தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் இன்று (1/5) காலை சுகவீனம் காரணமாக பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் இன்று (1/5) காலை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்