குறுக்கே வந்த பன்றிகள் , பள்ளத்தில் பாய்ந்த வாகனம்
பலாங்கொடையில் இருந்து ஹட்டன் பகுதிக்கு மரக்கறிகள் ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பாதையை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் இடம்பெற்றுள்ளது. வீதியின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக சென்றதனால், வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமையாயில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் இருந்த சாரதியும் உதவியாளரும் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளார்கள். வாகனமும் மற்றும் வாகனத்தில் இருந்த மரக்கறிகழும் சேதமாகியுள்ளதாக தெரியவருகிறது
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.