Fri. May 17th, 2024

கிளி. விபத்தில் அதிரடிப்படை வீரர் பலி!

 

கிளிநொச்சி – ஏ-9 வீதி, 155ம் கட்டைப் பகுதியில் நேற்று  (29) மாலை இடம்பெற்ற விபத்தில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155ம் கட்டை சந்திப் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி திரும்பும் வேளையில் விசேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படிநெகுடுவாவ, மகுலுகஸ்வெவவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தனபாலகே ரோஷன் பிரதீப் (32-வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்