கிளிநொச்சி அதிசயம் அணி மகுடம் சூடியது
டயலொக் கிண்ணத்திற்கான பெண்களிற்கான கரப்பந்தாட்டத் தொடரில் கிளிநொச்சி அதிசயம் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கிளிநொச்சி அதிசயம் அணியை சேர்ந்த உடுப்பிட்டி சிவகுமரன் அணி மோதியது. மூன்று செற்கள் கொண்ட போட்டியில் கிளிநொச்சி அதிசயம் அணி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.