கழுத்தில் சுருக்கிட்ட நிலையி்ல் சடலம் மீட்பு
பருத்தித்துறை முனைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பருத்தித்துறை முனைப் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் மதுரநாயகம் அன்ரன் ராஜ்குமார் (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.