கருணாவின் ஆதரவை மஹிந்த பெறுவது சரியென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதில் என்ன பிழை – அமைச்சர் தலதா அத்துகோரல
அரந்தாலாவயில் பிக்குமார்களை கொலைசெய்த கருணா அம்மானின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொள்ள முடியுமென்றால், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதில் எந்த பிழையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தலதா அத்துகோரள இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக வழியில் உள்ள அரசியல் கட்சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அந்த கட்சியினர் தான் முடிவு செய்யவேண்டும் . ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தால் அதனை வரவேற்று ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்