Sat. May 18th, 2024

கரவெட்டி பிரதேச செயலக வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர் தெரிவு நாளை

கரவெட்டி பிரதேச செயலகத்தால் வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.
இத்தெரிவு நாளை ஞாயிற்றுக்கிழமை கருணாகரன் மைதானத்தில்  பிற்பகல் 1 மணிமுதல் இடம்பெறவுள்ளது.
இத்தெரிவில் இடம்பிடிக்கும் வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர் போன்றோருக்கு மாதாந்தம் ஊக்குவிப்பாக கணிசமான  தொகையை வழங்கப்படவுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் ஆண்களிற்கான உதைபந்தாட்டம், பெண்களுக்கான கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்களுக்கான தெரிவு இடம்பெற்றுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டிற்கான புதுமையான திட்டங்களின் அடிப்படையில்  2021- 2025 (பிரதேச விளையாட்டு குழுக்கள் தெரிவு செய்தல் ) இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்திட்டத்திற்கு அமைவாக
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒவ்வொரு பிரதே செயலக பிரிவிற்கும் பிரபல்யமான இரண்டு விளையாட்டுக்களுக்கான பயிற்சி குழுக்கள் அமைக்கப்பபட உள்ளது .
மேற்படி தெரிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்ட தெரிவுகள் நாளை 2021.12. 05ந் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப 01.00 மணிக்கு கருணாகரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும். தெரிவு முறைமையினை தெரிவில் பங்குபற்ற உள்ள வீர, வீராங்கனைகளுக்கு தெளிவுபடுத்துமாறும் உரிய நேரத்திற்கு வீர வீராங்கனைகளை அனுப்புவதற்கான நடவடிக்களை மேற்கொள்ளுமாறும் கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஹரிகரன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்