Sat. May 18th, 2024

கரவெட்டி தெற்கில் 17 பேருக்கு தொற்று

கரவெட்டி தெற்கு பகுதியில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி தெற்கு பகுதியில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து பலர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். அவர்களில் 196 பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கரவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 15 பேருக்கும், துன்னாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மத்தெணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்