Fri. May 17th, 2024

கரவெட்டி சுகாதார பிரிவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR முடிவுகளின் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நெல்லியடி சுகாதார பிரிவில் இருவருக்கும்,  உடுப்பிட்டி சுகாதார பிரிவில் இருவருக்கும்,  துன்னாலை சுகாதார பிரிவில் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நெல்லியடி சுகாதார பிரிவில் மாவட்ட செயலகத்தில் பனை தென்னை வளப் பிரிவில் கடமையாற்றும் கரவெட்டி மத்தி வளர்மதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,  அபிவிருத்தி மதிப்பீட்டு திணைக்களத்தில் பணிப்பாளராக கடமையாற்றும்  கலட்டி கரணவாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தமிழ் FM இல் பணிபுரியும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட ஒருவருக்கும், துன்னாலை சுகாதார பிரிவில் துன்னாலை மேற்கு பகுதியில்  ஏற்கனவே தொற்று உள்ளன ஒருவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள், மற்றும் வீட்டில் இருந்த பெண் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்