கரவெட்டி சுகாதார பிரிவில் தடுப்பூசி ஏற்றும் நாளும் கிராம அலுவலகர் பிரிவும்
வடமராட்சி கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்டோருக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நாளைமுதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட கிராம அலுவலகர் பிரிவில் பதிவில் உள்ளவர்கள் மாத்திரமே குறிப்பட்ட இடத்தில் தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளையும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் கரவெட்டி மேற்கு கிராம அலுவலகர் பிரிவினருக்கு யா/ஸ்ரீ நாரதா வித்தியாலயத்திலும், செவ்வாய்க்கிழமை கரவெட்டி வடக்கு கிராம அலுவலகர் பிரிவினருக்கு யா/திரு இருதயக் கல்லூரியிலும், புதன்கிழமை துன்னாலை மத்தி கிராம அலுவலகர் பிரிவினருக்கு யா/காசிநாதர் வித்தியாலயத்திலும், வியாழக்கிழமை நெல்லியடி கிராம அலுவலகர் பிரிவினருக்கு நெல்லியடி மத்திய கல்லூரியிலும், வெள்ளிக்கிழமை நெல்லியடி கிழக்கு கிராம அலுவலகர் பிரிவினருக்கு நெல்லியடி மத்திய கல்லூரியிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.