கரவெட்டி சாண்டில் குளத்தில் முதலைகள் தொல்லை
கரவெட்டி பகுதியில் அமைந்துள்ள சண்டி குளம் அப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்காக பாவனையில் உள்ள குளம் தற்போது பெய்து வரும் மழையினால் குளம் நிரம்பி வழிகின்றது. குளத்துக்குள் இரண்டு முதலைகள் தற்போது அங்கு வந்து இருப்பதனால் சிறியவர்கள் வயது வந்தவர்கள் குளிப்பதற்கு மிகவும் பயந்த வண்ணம் உள்ளார்கள். குளத்தில் குளிப்பவர்கள் தற்போது குளிப்பதற்கு வன ஜீவராசி திணைக்கள உடனடியாக நடவடிக்கை எடுத்து இரு முதலைகளையும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொடுக்கிறார்