Mon. May 20th, 2024

கரவெட்டி ஒன்றியத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

கரவெட்டி ஒன்றியத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தினக்கூலி செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த வருமான இழக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உலர் உணவு வகைகள் நிவாரணமாக வழங்குவதற்குரிய ஏற்பாட்டினை கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. இதன் முதற் கட்டமாக  50 தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம் தலைமையில் ஒன்றிய உபதலைவர் இராகவன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கரவெட்டி வடக்கு கிராம அலுவலர் யாதவன் முன்னிலையில் வழங்கி வைத்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்